Monday, February 26, 2018

18. கேரள யாத்திரை - 1

கேரள திவ்யதேச யாத்திரை 21.01.18 அன்று பாலக்காட்டில் தொடங்கியது. இந்த ஆறு நாள் யாத்திரையில் நான் தரிசித்த 12 திவ்ய தேசங்கள் பற்றி விரிவாக வழிகாட்டும் வைணவம் என்ற என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். நான் சென்ற மற்ற இடங்கள், தரிசனம் செய்த பிற ஆலயங்கள் பற்றி இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். 

21.01.18 - முதல் நாள் 
காலையில் முதலில் நாங்கள் சென்றது கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலுக்கு. எங்கள் குழுவின் வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் இந்த ஆலயத்தின் சிறப்பு பற்றிக் கூறினார். 'கல்பாத்தி காசியில் பாதி' என்ற வழக்குக்கேற்ப இந்தக் கோவில் பழமையும், புனிதமும் நிறைந்தது.

கோவில் பிரகாரத்தை ஒட்டி அருகே கல்பாத்தி ஆறு ஓடுகிறது. விஸ்வநாதர் ஆலயத்துக்கு வெளியில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது.

கோவில்களின் புகைப்படங்களைக் கீழே காணலாம்  











கல்பாத்தி கோயில் தரிசனத்துக்குப் பிறகு நாங்கள் சென்ற இடம் வடக்குந்தரா  பகவதி கோவில். இந்தக் கோவிலில் விஷ்ணு சந்நிதியும், பகவதி சந்நிதியும் இருக்கின்றன. கோவில் புகைப்படங்கள் கீழே. 



அடுத்து நாங்கள் சென்ற இடம் பாலக்காடு கோட்டை. இது மிகவும் பழமை வாய்ந்த கோட்டை என்று கருதப்படுகிறது. 1757ஆம் ஆண்டு இது ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டது. பிறகு திப்பு சுல்தான் வசமும் இருந்தது. இது திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. பின்பு இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர். 

மதில் சுவர்களையம், சில வாயில்களையும் தவிர,  தவிர பெரும்பாலும் இது ஒரு திறந்த வெளியாகத்தான் இப்போது இருக்கிறது. கோட்டையின்  உள்ளே ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. ஹைதர் அலி இந்தக் கோட்டையைத் தாக்க முயன்றபோது, ஒரு குரங்கு ஹைதர் அலியின் வீரர்களுடன் சண்டையிட்டு விரட்டி, கோட்டைக்குள் ஒளிந்திருந்த மக்களைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. வரம் தரும் ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றிருக்கும் இவரை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.

கோட்டையின் சில புகைப்படங்களைக் கீழே காணலாம்.









ஆஞ்சநேயர் கோவில் முன் 





















பிற்பகலில் மலம்புழா அணைக்கட்டுக்குச் சென்றோம். ஆற்றில் தண்ணீர் அதிகம் இல்லாததால் அணைக்கட்டு சோபை குன்றிக் காணப்பட்டது. கேபிள் காரில் அணைக்கட்டுப் பகுதி முழுவதும் சுற்றிப்பார்க்கக் கட்டணம் ரூபாய் 80. சுமார் 15 நிமிடங்கள் பயணம். புகைப்படங்களைக் கீழே காணலாம். நான்கு சிறிய வீடியோக்களும் உள்ளன .




































































மாலையில் புத்தூர் பகவதி க்வில் தரிசனத்துடன் யாத்திரையின் முதல் நாள் நிறைவடைந்தது. இரவில் பாலக்காட்டிலேயே தங்கினோம்.

No comments:

Post a Comment